திமுகவின் அவசர கூட்டம் தொடங்கியது

திமுகவின் அவசர கூட்டம் தொடங்கியது

  • திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியுள்ளது. 
  • சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.  

தமிழகத்தில் ஊராக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதனிடையே திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம்  ஜனவரி  21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்  வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21 ஆம் தேதி காலை 10 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று  தெரிவித்தார்.அதன்படி இன்று கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில்திமுக மற்றும் காங்கிரஸ் ஏற்பட்ட உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளுக்கு பின் திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube