மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய துணைமுதலமைச்சர் .!

தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார். 

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டார்.   தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதையடுத்து, மருத்துவமனை சார்பில் துணை முதல்வர் உடல்நிலை சீராக உள்ளது, எனவும் இன்று மாலை வீடு திரும்பபுவார் என அறிக்கை வெளியானது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார். 

author avatar
Dinasuvadu desk