தேர்தலில் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பில்லை என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டு மக்களுக்கு அதிமுக பல நன்மைகள் செய்துள்ளது. திமுக பொறுத்தவரை நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை முழுமையாக மொட்டை அடித்துவிட்டார்கள். இதன் தாக்கம் திமுகவுக்கு எதிராக உள்ளாட்சி தேர்தலில் இருக்கும்.
அதிமுகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுவோம். பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு செய்துள்ளதால், எங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கைகொடுக்கும் என நம்பிக்கை உள்ளது. மக்கள் எங்களுடன் இருக்கும் வரை எந்த இழப்பும் கிடையாது.
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு. தனித்து போட்டியிடுவது பாமகவின் தனிப்பட்ட முடிவு. யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்து போட்டி என முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. உட்கட்சி பற்றி பேசுவதற்கு யாருக்கும் அந்த தகுதி கிடையாது.
அம்மாவின் மறைவிற்கு பிறகு பல விமர்சனங்களை கடந்து தற்போது வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் குறைந்த வாக்குகள் தான் வித்தியாசம். மாபெரும் வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளோம். அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் எந்த பாதிப்பு கிடையாது என தெரிவித்தார்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தலையை தேடி கொண்டியிருக்கிறார்கள் காவல்துறை. மதுரையில் மாற்றுத்திறனாளி படுகொலை செய்துள்ளனர் என்றும் ராமநாதபுரத்தில் பெட்ரோல் பங்கில் கொள்ளை நடந்துள்ளது என குற்றசாட்டி திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…