தலைநகரில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது..இன்று 961 பேருக்கு கொரோனா.!

தலைநகரில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது..இன்று 961 பேருக்கு கொரோனா.!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 961 பேருக்கு கொரோனா, 15 பேர் உயிரிழப்பு.

டெல்லியில் இன்று ஒரே நாளில் 961 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,37,677 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,186 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,23,317 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,004 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது  10,356 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube