ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் மிகச்சிறப்பான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது – வைகோ

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் மிகச்சிறப்பான தீர்ப்பை  உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று  வைகோ தெரிவித்துள்ளது.

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக சார்பாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில்,இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது.இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது.

மேலும் மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாம்.மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை.மேலும் இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும்.இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உய்ரநீதிமன்றம்.இந்நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மிகச்சிறப்பான தீர்ப்பை உயர்நீதி மன்றம்  வழங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.