20 ஆண்டுகளுக்கு பின் காதலிக்கும் பொழுது சந்தித்த உணவகத்திற்கு சென்று 14.56 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த தம்பதி!

20 ஆண்டுகளுக்கு பின் காதலிக்கும் பொழுது சந்தித்த உணவகத்திற்கு சென்று 14.56 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த தம்பதி!

தங்கள் காதலிக்கும் பொழுது சந்தித்து கொண்ட உணவகத்திற்கு 20 வருடங்களுக்கு பின் சென்ற தம்பதிகள் ஹோட்டல் ஊழியருக்கு 14,56,000 ரூபாயை டிப்ஸாக கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா சிகாகோவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வந்திருந்த தம்பதிகள்  பரிமாறிய உணவாக ஊழியருக்கு டிப்ஸாக 14,56,000 ரூபாயை கொடுத்துள்ளனர். ஆடம்பரமான உணவகத்திற்கு செல்லும் பொழுது பலர் உணவாக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், குறைந்த அளவு தொகையை தான் கொடுப்பார்கள்.

ஆனால், இந்த தம்பதியினரின் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் உணவாக ஊழியரை ஆடிப்போயிருப்பர். அவ்வாறு அவர்கள் பணம் கொடுப்பதற்கு காரணம் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது சற்று வயது சென்றிருந்தாலும், அவர்கள் தங்களது இளமை பருவத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம். காதலிக்கும் பொழுது இந்த உணவகத்தில் தான் அடிக்கடி சந்தித்து கொள்வார்களாம். முதன்முறையாக இருவரும் சந்தித்து கொண்டது கூட இந்த உணவகத்தில் தானாம். இதன் நினைவாக தான் இந்த தம்பதிகள் 1.46 லட்சத்தை டிப்ஸாக கொடுத்துள்ளார்களாம்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube