கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம்

கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய மருத்துவ சங்கம். 

கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ​​ஆயுர்வேதத்தைச் சேர்ந்த கொரோனிலை பதஞ்சலி அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் செயல்திறன் குறித்து அறிவியல் சான்றுகள் இல்லாததால் அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இதன் பின் கடந்த 19-ஆம் தேதி அன்று பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு 100% குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என பதஞ்சலி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் உலக சுகாதார அமைப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.அதாவது, கொரோனா  சிகிச்சைக்காக எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் மதிப்பாய்வு செய்யவில்லை என்றும் அதற்கு சான்றளிக்கவில்லை என்றும்  தெளிவுபடுத்தியது.

பதஞ்சலியின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா இது குறித்து அளித்த விளக்கத்தில்  “கொரோனிலுக்கு  இந்திய அரசாங்கத்தின் டி.சி.ஜி.ஐ அனுமதி வழங்கியுள்ளது .ஆனால் உலக சுகாதார அமைப்பு வழங்கவில்லை என்று கூறினார். ஆனால் கொரோனில் கிட் என்ற மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது என்ற செய்தி வெளியான நிலையில் இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.பதஞ்சலியின் கொரோனில்  கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருந்து என்று நிறுவனம் கூறுவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பதால், இதுபோன்ற பொய்யான புனையப்பட்ட விஞ்ஞானமற்ற உற்பத்தியை முழு நாட்டு மக்களுக்கும் வெளியிடுவது எவ்வளவு நியாயமானது .கால அளவை நீங்கள் தெளிவுபடுத்த முடியுமா? ,இந்த நாட்டிற்கு அமைச்சரிடமிருந்து ஒரு விளக்கம் தேவை என்று  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Recent Posts

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

59 seconds ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

9 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

10 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

11 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

11 hours ago