கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா சவால் பெரியது என்று பிரதமர் மோடி ஞ்சாயத்து ராஜ் திவாஸ் குறித்த விழாவில் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வாமித்வா’ திட்டத்தின் கீழ் இ-சொத்து கார்டுகளை விநியோகிப்பதை பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பஞ்சாயத்து ராஜ் திவாஸ் குறித்த விழா இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு கிராமப்புறங்களை பாதிக்காத வகையில் தொற்றுநோய் தடுக்கப்பட்டது என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா சவால் பெரியது என்றும், தொற்று நோய் கிராமங்களைத் தாக்காமல் எல்லா வகையிலும் தடுக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் யார் முதலில் வெற்றிபெறப் போகிறார்கள் என்றால், அது இந்தியாவின் கிராமங்கள் தான். கிராமங்களின் மக்கள் நாட்டிற்கான வழியைக் காண்பிப்பார்கள். கிராமங்களின் மந்திரம் “தவாய் பீ, கடாய் பீ” (மருந்து மற்றும் எச்சரிக்கையுடன்) இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களை கிராமங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள் தங்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் எனவும் தெரிவித்தார். மே, ஜூன் மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்க முடிவு செய்துள்ளது. இது 80 கோடி மக்களுக்கு பயனளிக்கும். அரசாங்கத்திற்கு ரூ.26,000 கோடி செலவாகும் என குறிப்பிட்டார்.
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…
Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…