ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் கட்சியே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு வரும் நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பி பெற எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிசான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த 60 பேர், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பேசியதாகவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி மனு கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் கட்சியே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது என கூறினார்.
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…