சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் அவரது தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது விஜய் என்று கூறப்படுகிறது.
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த புது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தில் சரத்குமாரின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த ராஜா ரவீந்தருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது தளபதி விஜய் தானாம். ஆனால் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். ஏனெனில் அந்த படத்தில் ராஜாவிற்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார். அப்போது சங்கவி மற்றும் விஜய் குறித்து வந்த கிசுகிசுக்கள் காரணமாக தான் விஜய் அவர்கள் நாட்டாமை படத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிய நாட்டாமையாக நடித்தது குறிப்பிடத்தக்கது.