இரட்டை அர்த்தத்தில் பேசி காமெடி நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்.!

இரட்டை அர்த்தத்தில் பேசி காமெடி நடிகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பிரபல சீரியல்  நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார். 

சினிமாயுலகில் கால் பதித்து நிற்க வேண்டுமென்றால், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு அட்ஜஸ்ட் செய்து தான் ஆக வேண்டுமாம் என்று கூறுகிறார்கள் . நடிகைகளை படுக்கையறைக்கு அழைப்பது தற்போதும் நடைமுறையில் இருந்து தான் வருகிறது. அதனையடுத்து மீ டு என்ற அமைப்பு இதற்காக தொடங்கப்பட்டு பல பெண்கள் பல பிரமுகர்களின் பெயரில் புகார் செய்தனர். அதில் பல சினிமா பிரமுகர்களின் பெயர்கள் சர்ச்சையில் சிக்கியது. இந்த நிலையில் பாக்கியராஜ் அவர்களின் வீட்ல விஷேசம்ங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரகதி. அதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார் பிரகதி. அதுமட்டுமின்றி அரண்மனை கிளி போன்ற சின்னத்திரை சீரியலும் நடித்து வருகிறார். இவர் தற்போது டோலிவுட் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்ததாக தெலுங்கு சேனலுடனான உரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, 

பல ஆண்டுகளாக என்னுடன் நல்ல முறையில் பழகி வந்தவர் என்று பெயரை குறிப்பிடாமல் கூறியுள்ளார். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் காலை 11 மணியளவில் அவர் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேச தொடங்கினார். மேலும் வித்தியாசமான முறையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அந்த நேரத்தில் நான் அதை பற்றி எதுவும் பேசாமல் விட்டு விட்டேன். பின்னர் அவரை கேரவனுக்கு அழைத்து சென்று நான் நீங்கள் தவறான அர்த்தத்தில் சிந்திக்க தவறான உடல் அசைவு மொழியை காட்டவோ, தவறாக பேசவோ செய்தேனா என்று அவரிடம் கேட்க, அவர் இல்லை என்றார். பின்னர் பிரகதி நான் உங்கள் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதால்  மற்றவர்கள் முன்னால் அவமானப்படுத்தவில்லை என்று கூறி அவரை எச்சரித்ததாக கூறியுள்ளார்.