இந்தியை திணிப்பது தான், தனது கடமை என மத்திய அரசு எண்ணுகிறது-துரைமுருகன்

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.  சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் . இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில், உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம்.

இந்தியை திணிப்பது தான், தனது கடமை என மத்திய அரசு எண்ணுகிறது .ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே மதம் என்பதை செயல்படுத்த நினைக்கிறது மத்திய அரசு என்று தெரிவித்தார்.