தமிழகத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய நிதியை தந்து உதவ வேண்டும்..!தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய நிதியை தந்து உதவ வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், கஜா புயலால் சேதமடைந்த படகுகளை அரசே சீரமைத்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும். புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களுக்கு ரூ.25,000 நிவாரணம் விவசாயிகளுக்கு தர வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு மிகப்பெரிய நிதியை தந்து உதவ வேண்டும்.ஆணவக் கொலைகள் கண்டிக்கத்தக்கது, கொலைக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Comment