#Breaking:சிபிஎஸ்இ +2 மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய குழு அமைப்பு..!

சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய 12 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிர்வாகம் அமைத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால்,பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.இந்த நிலையில்,உச்சநீதிமன்ற நீதிபதிகள்,மத்திய அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால்,எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து 3 வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறைந்தது 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் தினமும் இது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் இந்த ஆலோசனை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய 12 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிர்வாகம் அமைத்துள்ளது.

மேலும்,அந்தக் குழுவிடம் 10 நாட்களுக்குள் மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறும் சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

1 min ago

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…

20 mins ago

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…

27 mins ago

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்…பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!’

Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…

28 mins ago

உங்க மிக்ஸியில் மறந்தும் இந்த பொருட்களை அரைச்சிடாதீங்க..!

Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…

31 mins ago

நான் வெளிப்படையாகவே சொல்றேன்.. எனக்கு அதுதான் முக்கியம்… கவுதம் கம்பீர்

ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்…

34 mins ago