” M.L.A_க்களிடம் பேரம் “எடியூரப்பா மீது வழக்கு பதிவு….!!

கர்நாடகா மாநிலத்தில் J.D.S மற்றும் காங்கிரஸ் M.L.A_க்களிடம் குதிரை பேரம் நடத்திய நடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து எடியூரப்பா மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏ மகனுடன் எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ உரையாடல் வெளியாகிய  கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது.இந்த ஆடியோ குறித்து கர்நாடக சட்டசபையில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது பெயர் இடம்பெற்றிருப்பதால் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துமாறு சபாநாயகர் கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சிறப்பு விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார் இந்த நிலையில் தம்மிடம் பேரம் பேசியதாக J.D.S சட்டமன்ற உறுப்பினர் மகன்  காவல்நிலையத்தில் புகார் அளித்தத்தன் அடிப்படையில் எடியூரப்பா மீது இந்திய குற்றவியல் குற்றவியல் சட்டம் 506 102 b மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
author avatar
Dinasuvadu desk

Leave a Comment