பிரதமர் குறித்து சசி தரூர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் சர்சைக்குரியது -பாஜகவினர் கண்டனம்!

பிரதமர் குறித்து கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் சர்சைக்குரியதாகியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ஆகிய சசிதரூர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் குறித்து ஒரு கேலி சித்திரம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அச்சித்திரத்தில் பிரதமர் மோடியின் காதைப்பிடித்து ஸ்ரீராமன் பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இச்சித்திரமும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜக தலைவர் சோபா என்பவர் பிரதமர் மோடி குறித்து வரைந்த சித்திரத்திற்கு பதிலடியாக சசிதரூர் இந்த சித்திரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் குறித்து வெளியிட்டுள்ள இந்த கேலிச்சித்திரம் சர்ச்சைக்குரிது என பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Rebekal