Murder :டெல்லியில் நடந்த மற்றொரு லீவ்-இன் பார்ட்னர் கொலை

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கரை அவரது  லீவ்-இன் பார்ட்னர் அஃப்தாப் பூனாவாலா கொன்று பல துண்டுகளாக வெட்டி நகரின் பல இடங்களில்  வீசிய சம்பவத்திற்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் தலைநகர் டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு டெல்லியில்  35 வயது பெண்ணான ரேகா ராணியைக் அவரது லீவ்-இன் பார்ட்னர் மன்பிரீத் சிங் என்ற 45 வயது நபர் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்டவர் கூர்மையான ஆயுதத்தை வைத்து  ரேகாவின் முகம் மற்றும் கழுத்தில் பல முறை வெட்டியதாகவும் , வலது கை விரல் சிதைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று அந்த பெண்ணின் 16 வயது மகள் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.அப்பொழுது அந்த குழந்தையை எழுப்பி மயக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார் சிங் .இதில் சந்தேகமடைந்த அந்த சிறுமி தனது அம்மாவை பற்றி கேட்க அவர் சந்தைக்குப் போயிருப்பதாக சிங் கூறியுள்ளான்.

பின்பு சிறுமி தனது உறவினருக்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, ரேகாவின் உடல் முகம் மற்றும் கழுத்தில் பல காயங்கள் மற்றும் வலது மோதிர விரல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.மன்பிரீத் சிங் அங்கிருந்து தப்பித்து பஞ்சாப் சென்ற நிலையில்  சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் அவர் பாட்டியாலாவில் உள்ள அவரது கிராமத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment