என்ன கேவலம்டா இது.! நீண்ட ஆயுளுக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளுடன் உடலுறவு வைத்து கொண்ட கொடூர தந்தை.!

  • சென்னை ஆவடியில், அருள் என்பவர், அவரது 16 வயது மகளை, பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்.
  • மகளுடன் பாலியல் உறவு வைத்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் செய்த கொடூரனை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,  புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கு, மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் பல ஆண்டுகளாக, வேளைக்கு செல்லாமல், தன்னை சிவன் அருள்பெற்ற சித்தர் என கூறிக் கொண்டு வந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அருள் தியானம் செய்வதாகக் கூறிக் கொண்டு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கணவனின் இந்த நடவடிக்கையால், அவரை நம்பி புரோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த அவரது மனைவி, வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். அருள் அதிக ஆயுளை பெற வேண்டும் என்பதற்காக, பெற்ற மகளுக்கு செய்த பெரும் கொடுமை வெளிவந்தது. அதாவது, ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு, குழந்தைகள் அவசர உதவி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர், 16 வயது சிறுமியை, அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அருள் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அந்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. விசாரணைக்காக, அருளை போலீசார் தேடியபோது, அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சென்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது மனைவியை விட்டு, மகளுக்கு உடல்நிலை சரியில்லை என பேச வைத்துள்ளனர். பின்னர் இதை கேட்டதும் அருள் கொல்லிமலையிலிருந்து வந்துள்ளார். வீட்டில் காத்திருந்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான், ஆன்மீகம் என்ற பெயரில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

தொடர் விசாரணையில், மகளுடன் பாலியல் உறவு வைத்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என, தியானத்திற்குப் போன இடத்தில் யாரோ கூறியுள்ளனர். எனவே, மனைவி, வேலைக்குச் சென்ற நேரத்தில், மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த கேவலமான கொடுமையை அவர் 4 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அருளை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

என்னங்க சொல்றீங்க அனிருத் இல்லையா? சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…

41 mins ago

ஸ்டுடென்ட்ஸ் எந்த லேப்டாப் வாங்கலாம்-னு ரொம்ப குழப்பமா இருக்கா? இது தான் பெஸ்ட்!

Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…

1 hour ago

‘தலைவர் 171’ டைட்டில் இதுவா? போஸ்டரில் சொல்லி அடித்த லோகேஷ்…

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…

1 hour ago

42 வயசுல இப்படியா? தோனியை பார்த்து வியந்த பிரையன் லாரா!

Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…

2 hours ago

தள்ளிப்போகும் பிரஸ் மீட்.! துல்லியமான தேர்தல் நிலவரம் எப்போது தெரியுமோ.?

Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…

2 hours ago

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

2 hours ago