சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள தா.பாண்டியன் உடல்.!

சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த தா.பாண்டியன் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று இரவு சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது என கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்