100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம்!

100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் போபாலில் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம்.

மத்திய பிரதேசத்தின் தலைநகரமாகிய போபாலில் உள்ள அயோத்தி என்னும் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பதாக பிறந்து 2 நாட்களே ஆன ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தையின் மார்புப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் ஏகப்பட்ட குத்து காயங்களுடன் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது குறித்து விசாரித்த பொழுது கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலையில் பிறந்த குழந்தை எனவும் அயோத்தி நகரில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளிக்கு முன்னால் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இந்த பெண் குழந்தை கிடந்ததாகவும் தகவல் கிடைத்தது என போலீசார் கூறியுள்ளனர்.

சால்வையால் போர்த்தப்பபட்டிருந்த குழந்தையை போலீஸ் அதிகாரிகள் பரிசோதித்து பார்த்த பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட குத்துக் காயங்கள் இருப்பதை அவர்கள் அறிந்து உடனடியாக குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு நேரத்தில் குழந்தை கோவிலுக்கு அருகில் வீசப்பட்டதால் மிருகத்தால் காயம் அடைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் மேலும் பரிசோதித்து பார்த்தபோது ஒரு சிறிய ஸ்க்ரூட்ரைவர் அல்லது கம்பி போன்ற கடினமான பொருட்களால் பலமுறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிறந்து 2 நாட்களே ஆன இந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை கண்டு போலீசார் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி ஐபிசி பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யதுள்ளனர். தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை இவ்வாறு சித்திரவதை செய்தது யார்? என விசாரணை நடை பெற்று வருகிறது. மேலும் அந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள கட்சிகளின் அடிப்படையில் தற்போது போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

1 hour ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

3 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

5 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

6 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

6 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

6 hours ago