பாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி இல்லை… பாசமான கட்சி : தமிழிசை செளந்தரராஜன்

  • தூத்துக்குடியில் தமிழிசை செளந்தர ராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று பாஜக கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, தூத்துக்குடியில் தமிழிசை செளந்தர ராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் பேசிய தமிழிசை, ” பாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி இல்லை, பாசமான கட்சி” என மக்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் பேசி, தனக்கு ஆதரவு அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment