இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டி-மாயாவதி அறிவிப்பு

உத்திரபிரதேச மாநிலத்தில்  பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி  கட்சிகள்  இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தது.ஆனால் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.
இதற்கு ஏற்ற வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று  அறிவித்துள்ளார்.மேலும்  தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.
மாயாவதி அறிவிப்பு தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.அப்போது அவர் கூறுகையில்,கூட்டணி முறிந்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்ளை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.