டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு

டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்து விமான நிலையத்திற்கு வந்த போலீசார் அந்த பையை சோதனையிட்டனர்.அதில் மின்சார வயர்கள் இருப்பதை அறிந்த அவர்கள் உடனே வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த பையில்  ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் அந்த பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இதனால் விமான நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.