ஆம்புலன்சில் சிறுநீரகத்தை சுமந்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்த ஓட்டுனர்! குவியும் பாராட்டுக்கள்!

மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் வேல்முருகனின் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்த திட்டமிடப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில், சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீராக்க 150 போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாகர்கோவில் மாநகரில் உள்ள குறுகலான சாலையில், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில், கார் மூலம் சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது. அதன் பின் அந்த சிறுநீரகம் வெங்கடேசுக்கு பொருத்தப்பட்டது. மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஒட்டி வந்த ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.