#BREAKING : தரையில் அமர வைத்த விவகாரம் ! ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது

ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில்  நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவிடம் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரவ் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை எஸ்.சி., எஸ்.டி., தடுப்பு சட்டத்தின் கீழ் புவனகிரி காவல்துறை கைது செய்தது.