தாயின் சடலத்துடன் ஒரு வாரமாக படுத்திருந்த 54 வயது மகன்!

உயிரிழந்த தனது தாயின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட 54 வயது மகன் ஒரு வாரமாக ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் எனும் பகுதியில் தனது 54 வயது மகனுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னொரு மகனும் மகளும் உள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாட்டில் உள்ளனராம். அவருடன் வசிக்கும் 54 வயது மகனுக்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது 54 வயது மகனுடன் வசித்து வந்த இந்தப் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயற்கையாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது மகன் அந்த தாய் உடனேயே ஒரு வார காலமாக அந்த வீட்டிலிருந்துள்ளார்.

அண்டை வீட்டில் இருந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பெண்மணியின் வீட்டுக்கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்த போது கிட்டத்தட்ட இறந்து ஒரு வாரத்திற்கு  மேலாக இருக்க கூடிய சிதைந்த நிலையிலான பெண்மணியின் சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர்.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது அவரது 54 வயது மன நோயாளியான மகனும் தனது தாயுடன் இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு வாரமாக உணவின்றி சரியான கவனிப்பு இன்றி மிக மோசமான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக உடல் சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றிய போலீசார், அவரது மகனையும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்பொழுது அந்த நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அப்பெண்மணியின் மரணத்திற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Rebekal

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

31 mins ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

2 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

3 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

4 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

4 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

5 hours ago