45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – 20 மாதங்கள் கழித்து நேரடியாக பங்கேற்பா?..!

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

நாட்டின் 45 வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக இதுபோன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து தற்போது அதிகாரிகள் நேரடியாக பங்கேற்று நடத்தப்படவுள்ள (முதல் ஆன்-கிரவுண்ட்) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.

அஜெண்டா:

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரி:

இக்கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை மறைமுக வரி வரம்பிற்குள் கொண்டு வருவது மற்றும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை ஆகியவை பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது.

கொரோனா அத்தியாவசிய மருந்துகள் மீதான ஜிஎஸ்டி விகித குறைப்பு நீட்டிப்பு :

அதாவது,கொரோனா சிகிச்சைக்குத் தேவையான நான்கு முக்கிய மருந்துகளான டோசிலிசுமாப், ஆம்போடெரிசின் பி, ரெம்டெசிவிர் மற்றும் ஹெப்பரின் போன்ற மருந்துகளின் மீதான வட்டி 12 சதவிகிதத்திலிருந்து ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டது,இந்த மருந்துகளின் மீதான வட்டி குறைப்பு தற்போது செப்டம்பர் 30, 2021 வரை செல்லுபடியாகும்.தற்போது, அவை டிசம்பர் வரை நீட்டிக்க விவாதிக்க வாய்ப்புள்ளது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை:

ஏப்ரல் 2020 முதல் ரூ. 1,13,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு மாநிலங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு இருப்பதால் ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி செஸ் வசூலில் முழு இழப்பீட்டுத் தேவையையும் பூர்த்தி செய்ய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் உள்ள தொகை போதுமானதாக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் இன்று ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறையை ஈடுசெய்ய இருக்கும் விருப்பங்களை பரிசீலிக்கலாம்.

உணவு சேவை விநியோக சேவைகளை ஜிஎஸ்டியின் கீழ் சேர்த்தல்:

ஜிஎஸ்டி கவுன்சில் இன்று உணவு பரிமாறுதல், தயாரித்தல் மற்றும் உணவு விநியோக சேவைகளை (டேக்அவே, டோர் டெலிவரி சேவைகள் உட்பட) “உணவக சேவை” என்று கருதுவதற்கான ஒரு ஆலோசனையை விவாதிக்க வாய்ப்புள்ளது. ஆதாரங்களின்படி, இந்த சேவைகள் ஐந்து சதவீத ஜிஎஸ்டியை ஈர்க்கக்கூடும்.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த முன்மொழிவை அங்கீகரித்தால், ஜொமாடோ, ஸ்விகி போன்ற முக்கிய உணவு விநியோக பயன்பாடுகள் ஐந்து சதவிகித ஜிஎஸ்டி ஸ்லாப்பின் கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

4 seconds ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

23 mins ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

30 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

10 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

11 hours ago