கோவில்பட்டியில் கோவிலில் 1 1/2 வயது குழந்தை…போலீசார் தீவிர விசாரணை…!!
கோவில்பட்டியில் கோவிலில் 1 1/2 வயது குழந்தை…போலீசார் தீவிர விசாரணை…!!
கோவில்பட்டியில் உள்ள பிரபல கோவிலில் ஒன்றரை வயது குழந்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்ததில் இந்த குழந்தைக்கு மனவளர்ச்சி குன்றியது தெரியவந்தது.இதையடுத்து குழந்தையை விட்டு சென்றது யார்? எப்போது விட்டு சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.