வாழ்த்திய அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி – தனுஷ் ட்வீட்.!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவர்க்கும் நடிகர் தனுஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தனது அசுர நடிபபால் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் தனுஷ். இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். இந்நிலையில், இன்று நடிகர் தனுஷ் தனது 38- வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு திரையுலக சார்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ” வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி ” எனது பிறந்தநாளில் என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கிய ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” ஓம் நமச்சிவாய” என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.