லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறையின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு 2021 தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்குமா? பிடிக்காதா? என்று ஸ்டாலின் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
யூடியூப், ஃபேஸ் புக்,டுவிட்டர் மூலம் ஏதாவது ஒரு செய்தியை பரப்பி அரசுக்கும் அதிமுக கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின். சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.
அரியர்ஸ் மாணவர்கள் பாஸ் என்கிற துணிச்சல் முடிவை எடுத்தவர் நம் முதல்வர்.மேலும் மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக 10ம் வகுப்பில் அனைவரும் பாஸ் என்று அறிவித்தவர்
5 முறை ஆட்சியில் இருந்த திமுகவால் மதுரைக்கு ஒரு வளர்ச்சியை செய்யவில்லை. தற்போது அதிமுக ஆட்சியில் மதுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளது.
விரைவில் மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை சத்தமில்லாமல் அதிமுக அரசு செய்து வருகிறது.அதே போல் லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது.
போக்குவரத்து நெரிசல் எதிர்காலத்தில் மதுரையில் இருக்காது. கலாம் சொன்னது போல அதிமுகவில் முதல்வராக வேண்டும் என்று நீங்களும் கனவு காணுங்கள் அதிமுக ஆட்சியில் முதல்வராக உங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
என்று தெரிவித்த அவர் மின்சாரக் கம்பிகள் மீது துணி காய போட்ட காலம், திமுக ஆட்சி காலம். திமுக ஒரு ரவுடி கட்சி அதுபோல ஒரு அரசியல் கட்சி இருக்கவே கூடாது, அதை ஒழிக்கும் வரை அதிமுக ஓயவே ஓயாது.திமுகவை அளிக்கும் சக்தி இளைஞர்கள் நீங்களாகிய நீங்கள் தான். திமுகவின் கதை 2021ல் முடியப் போகிறதுஎன்று பேசினார்.
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…