தேங்கா பறிக்க குரங்குகளை பயன்படுத்தும் தாய்லாந்து..! பீட்டா கண்டனம்

தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் மக்கள் அனைவரும் சுற்றுலா சென்று பார்க்க விரும்புவது அங்குள்ள குரங்குகள் என்று கூறலாம், தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தோட்டங்களில் வேலை செய்யும் அழகை பார்ப்பதற்கு அதிக மக்கள் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் குரங்குகள் பயன்படுத்துவதற்கு பீட்டா அமைப்பு நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் காடுகளில் மிகவும் சந்தோசமாக சுற்றித் திரியும் குரங்குகளை கட்டாயப்படுத்தி பிடித்து ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய் பறிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றன மேலும் தாய்லாந்தில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது, மேலும் இது தாய்லாந்து வணிகத்தில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பீட்டாவின் பிரச்சாரத்தை தொடர்ந்து தொடர்ந்து 15,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் குரங்குகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் தாய்லாந்திலிருந்து தேங்காய் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் பீட்டாவின் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் தாய்லாந்து நாட்டின் வர்த்தக அமைச்சர் ஜூரின் லக்சனாவிசிட் கூறுகையில்  பட்டாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டானது மேலும் இது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தைப் பாதித்திருக்கிறது. மேலும் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை சந்தோசமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை என்று பதிலளித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.