தீபாவளியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் ? ரகசிய குறியீட்டின் மூலம் பேச்சு இடைமறித்து கேட்ட

இந்தியா -நேபாள எல்லை வழியாக 5 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள்  உள்ளே நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறது.இதனிடையே NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பது என்னவென்றால் நேபாளம் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல முயற்சிப்பதாகவும் இந்தியா -நேபாள எல்லையில் உள்ள கோரக்பூரில்  5 பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ரகசிய குறியீடுகள் மூலமாக பேசியதாகவும் அதை இடைமறித்து கேட்க்கும் பொழுது நேபாளம் வழியாக டெல்லியில் வந்து சேர்ந்த பிறகு காஷ்மீர் பயங்கவாதிகளை வரவழைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர் .(This time, it would be an explosive Diwali. Entire India will see and remember it) இந்த முறை, இது ஒரு வெடிக்கும் தீபாவளியாக இருக்கும். முழு இந்தியாவும் அதைப் பார்த்து நினைவில் வைத்திருக்கும் என்று அவர்கள் ரகசிய குறியீட்டின் மூலம் பேசியுள்ளனர் .
இதனிடையே நேபாள எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதலை முறியடிக்க ராணுவம் தீவிர சோதனை மற்றும் தயார் நிலையில் உள்ளது .
 

author avatar
Dinasuvadu desk