ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கித் தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் மாவட்டம் பட்காம் எனும் பகுதியில் நேற்றிரவு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது திடீரென மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த 3 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஜனிக்காம் எனும் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டர் சம்பவத்தின் போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
இதில் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். மேலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஸ்ரீநகரில் உள்ள பர்சுலா பகத் எனும் இடத்தில துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் 2 போலீசாரை சுட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசாரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…