ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்! சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிபிஆர்எஃப் வீரர், ஒரு கிராமவாசி உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சோபாரில் சிபிஆர்எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 4 சிபிஆர்எஃப் வீரர்கள் உட்பட, கிராமவாசி ஒருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, 5 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 1 சிபிஆர்எஃப் வீரர் மற்றும் ஒரு கிராமவாசி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, டிஜிபி தில்பாக் சிங், சிபிஆர்எஃப்  வீரர்கள் மீதான தாக்குதலை உறுதி செய்துள்ள நிலையில், தாக்குதல் நாடைபெற்ற பகுதி சீலிடப்பட்டு, பயங்கரவாதிகளை தேடும் பணி .தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.