காஷ்மீர் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை..!

காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

காஷ்மீரில் நடந்த இந்த பயங்கர தாக்குதலில் தீவிரவாதிகளால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு குண்டு அடிபட்டது.  இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும், இதனை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது தனமண்டி வனச்சரக பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷீமா நபி கஸ்பா தெரிவித்துள்ளார்.