29 C
Chennai
Wednesday, June 7, 2023

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

தெற்கு அமெரிக்காவில் இருந்து செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.!

சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு...

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

பசிபிக் பெருங்கடலின் லாயல்டி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்..! ரிக்டர் 6.1 ஆக பதிவு..!

பசிபிக் பெருங்கடலில் லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

மேலும், நியூ கலிடோனியாவின் நௌமியாவிலிருந்து 415 கிமீ கிழக்கே உள்ள லாயல்டி தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது. தற்பொழுது, சுனாமி குறித்த எச்சரிக்கை குறித்த எந்த தகவலும் வெளியாக வில்லை.

மேலும், இந்த மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 3 வது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, பிஜி, வானாட்டு தீவுகளுக்கு அருகே 7.7 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், நியூ கலிடோனியாவின் கிழக்கே 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.