பயங்கர விபத்து…கார் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி.!!

விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.