#Shocking:தமிழக இளம் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் மரணம் – மத்திய அமைச்சர் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை மோதியதில்,கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் விஷ்வா நோங்போ சிவில் மருத்துவமனையை அடைவதற்குள் இறந்தார்.

மேலும்,விஷ்வாவுடன் பயணித்த பிற இளம் வீரர்களான ரமேஷ் சந்தோஷ்குமார்,அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.இதனையடுத்து அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வறின்றனர். இதனையடுத்து,தீனதயாளன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்துள்ளார்.