மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்…!

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையும் கட்ட  கூடாது என, கடந்த 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், கர்நாடகா அரசு அதனை பொருட்படுத்தாமல், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என உறுதியாக உள்ளது.

இதனையடுத்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு மற்றும் மற்ற கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் ராம்நகர் பகுதியில்,  தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, பிரேமலதா அவர்கள் 1 கி.மீ தூரம் டிராக்டர் ஓட்டி வந்து, ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.