இன்று முதல் 5 நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!

இன்று முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 நாட்களுக்கு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, தமிழாக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அமமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 நாட்களுக்கு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இன்று கும்மிடிப்பூண்டியில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் அவர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.