இந்த 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பநிலை உயரும்..வானிலை மையம்..!

8 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கோடைக் காலம் நெருங்கி வரும் நிலையில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan