#அதிரடி- கல்லூரிகளில் மதிய உணவுத் திட்டம்! ராவ் ராக்!

அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை  அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தெலுங்கானவில் நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அளித்த பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் படிக்கின்ற இளநிலை மணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

அரசு கல்லூரிகளில் படிக்கின்ற இளநிலை மாணவர்கள் மதிய உணவு நேரம் முடிந்ததும் மீண்டும் கல்லூரி வகுப்புகளுக்கு வராமல் திரும்பி செல்கின்றனர்.

இதனால் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தபடுவதன் மூலமாக அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் மட்டுமின்றி மாநில முழுவதும் அரசு கல்லூரியில் உள்ள வளாகங்களில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டப்பட்டு அதற்கும்  உத்தரவிடப் பட்டுள்ளது என்று கூறி இந்த அதிரடியான அறிப்பையும் அறிவித்துள்ளார்.

author avatar
kavitha