வைர வியாபாரியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அரசியல்வாதி உட்பட மேலும் 12 பேருக்கு கொரோனா.!

தெலுங்கானாவில் வைரவியாபாரி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு வைர வியாபாரி சில வாரங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களை கூப்பிட்டு விருந்து வைத்துள்ளார்.

அதன் பிறகு சில நாளில் வைரவியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த வியாபாரி உயிரிழந்தார்.

அதன் பிறகு விருந்தில் பங்கேற்ற இன்னோர் வைர வியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவரும் உயிரிழந்தார். தற்போது அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.