சட்டவிரோத பேனர் வைக்க கூடாது என்று தொடர்களுக்கு கூறுங்கள் – நீதிபதி அறிவுறுத்தல்!

சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என்று தம் தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் கூற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறித்தியுள்ளார்.

சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி அவர்கள் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்தும் சட்ட விரோதமா பேனர் வைக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று வரும் போது பேசிய நீதிபதிகள் அரசியல் கட்சி தலைவர்கள் தம் தொண்டர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்ற முறையை கூறி வழிநடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்று தமிழக தலைமை செயலாளர் முறையாக பார்வையிட வேண்டும் என்றும் நீதிபதி கூறி இருக்கிறார்.