தெலங்கானா மாநில சட்டப்பேரவை:வாக்களிக்க வந்த ஜூனியர் என்.டி.ஆர்…!

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில்  தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது வாக்கை பதிவு செய்தார்.
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மாலை 5 மணிக்கு பதில் 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.
இந்நிலையில்  தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில்  தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது வாக்கை பதிவு செய்தார்.
 
 

Leave a Comment