உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!

உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு “கண்ணீர் அஞ்சலி” போஸ்டர் ஒட்டிய சம்பவம், பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரம்பலூர், மேட்டுத்தெருவை சேர்ந்தவர், செல்வராஜ் இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரோஷ்னி@அம்மு என்ற மகளும் உள்ளனர். 23 வயதாகும் ரோஷ்ணிக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டு கொட்டகை எனும் கிராமத்தை சேர்ந்த தனது
தாய்மாமன் மகனான வீரராகவன் என்பவருடன் கடந்த 2018, மே மாதம் திருமணம் நடந்தது.

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வீரராகவன், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனை பிரிந்த ரோஷ்னி, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ரோஷ்னியின் திருமணத்தின்போது அவரின் பெற்றோர் 43 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். அதனை திரும்பிக்கேட்டபோது, கணவர் குடும்பத்தினர் கொடுக்க மறுத்தனர்.

இந்தநிலையில் ரோஷினி உயிரிழந்துவிட்டதாக கூறி கணவர் வீட்டார்கள் பெரம்பலூர் நகர் முழுவதும் நேற்று முன்தினம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினார்கள். இதனை கண்ட அவரின் உறவினர்கள், தோழிகள் என பலரும் துக்கம் விசாரிக்க ரோஷினி வீட்டிற்கு சென்றனர்.

அங்கு ரோஷ்னி உயிருடன் இருப்பதை பார்த்து அவர்கள் திகைத்துப்போயினர். இது, ரோஷ்னி குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரோஷினியின் தந்தை பெரம்பலூர் போலீசாரிடம் புகாரளித்தார். இதனை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

3 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago