தமிழகத்தில் வரும் 8-ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் வரும் 8-ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.