இன்று ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.!

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இன்று பணிக்கு வர வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும்
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.