“ஆசிரியர்கள் இனி ஆன்லைன் மூலம் பாடம் நடத்த அனுமதி “- தமிழக ஆசிரியர் மன்றம்…!

“ஆசிரியர்கள் இனி ஆன்லைன் மூலம் பாடம் நடத்த அனுமதி “- தமிழக ஆசிரியர் மன்றம்…!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா 2 வது அலையானது விஸ்வரூபம் எடுத்து தீவிரமாகப் பரவி வருவதால்,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தக் கோரிக்கையில்,”அதிகப்படியான கொரோனா பரவலால் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிருவனங்களும் மூடப்பட்டுள்ளன.இதனால்,கல்லூரி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக பாடம் நடத்தி வருகின்றனர்.

ஆனால்,தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் மட்டும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம். பள்ளிகளுக்கு மாணவர்கள் வராதபோது ஆசிரியர்கள் வருவது தேவையற்றது.

எனவே,கொரோனா 2 வது அலையின் பரவல்,கோடை வெயிலின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,ஆசிரியர்களை வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியாக பாடம் நடத்த தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்”,என்று சண்முகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Join our channel google news Youtube