மும்பையில் கொரோனா நோயாளிகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்து சென்று சேவை செய்யக் கடிய ஆசிரியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே செல்லும் நிலையில், மக்கள் பலர் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆம்புலன்ஸ் வசதி இல்லாமலும் உயிர் இழந்து விடுகின்றனர். ஓரளவு காப்பாற்றக் கூடிய சூழ்நிலையில் இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் பலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து பகுதி நேரமாக நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு உதவி வருகிறாராம்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நோயாளிகளை ஏற்றுவதற்கு அஞ்சி அவர்களைப் புறக்கணித்து வரும் நிலையில், பள்ளி ஆசிரியரான சாவந்த் தற்போது துணிச்சலாக களமிறங்கி நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார். மேலும் இவர் ஆட்டோவில் நோயாளிகளை ஏற்றிச் செல்வது மட்டும் அல்லாமல் இந்த நோயாளிகளுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. தனக்கு பாதுகாப்பாக ஒரு உடை அணிந்து கொண்டு செயல்படக் கூடிய இவர், கொரோனா தொற்று இருக்கும் வரை தான் இந்த சேவையை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியரின் சேவைக்கு தற்பொழுது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…